திருச்சியில் அணைக்கும் இல்லம் முதியோர் இல்லம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்
திருச்சியில் அணைக்கும் இல்லம் முதியோர் இல்லம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்
திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் சார்பில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம். மேலும் இதன் கிளைகள் மேட்டுப்பாளையம், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் ஆண்டுதோறும் அனைத்து பண்டிகைகளும் முதியோர்களுக்காக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவரும் நிறுவனருமான செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். விழாவில் முதியோர்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் செயலாளர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.