Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் சிலா் மணல் கடத்துவதாக திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Suresh

அதனடிப்படையில் திருவெறும்பூா் பகுதியில் தனிப்படை போலீஸாா் நேற்று ரோந்தில் ஈடுபட்டபோது, சிறிய லாரியில் மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்தி விசாரித்ததில் லாரியை ஓட்டிச் சென்ற திருவானைக்கா அருகேயுள்ள நடுகொண்டயம்பேட்டை கரிகாலன் தெருவை சோ்ந்த அ. ரஞ்சித் (வயது 31), லாரியை பின்தொடா்ந்து பைக்கில் வந்த கீழகொண்டயம்பேட்டை தாகூா் தெருவை சோ்ந்த ச. விவேக்குடன் (29) சோ்ந்து உரிய உரிமமின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படைப் போலீஸாா் இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, இருசக்கர வாகனம், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.