Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை. பிசிசிஐ தலைவர்.

0

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பும்ரா முதல் போட்டியில் விளையாடப் பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து விலகினார். இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள டி20 போட்டி தொடரிலிருந்து விலகினார் மேலும் அவர் ,டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளிவந்தன.இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சி அடைந்தனர் .

பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது .

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் ..

மேலும் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியுடன் செல்வாரா என்ற கேள்விக்கு , அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் இது குறித்து நாங்கள் அறிவோம் என கூறினார்.இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Leave A Reply

Your email address will not be published.