திருச்சியில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு.
திருச்சி
ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் கடந்த 3ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை எரித்துள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் மேலூர் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எரிந்து போன இருசக்கர வாகனம் யாருடையது? அது திருடப்பட்டு வந்ததா? அல்லது கொலை வழக்கில் தொடர்புடையதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.