Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கோரிக்கை.

0

 

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ளது.மேலும் நாள்தோறும் இந்த பூங்காவிற்கு வருகை தரும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகிறார்கள்.

திருச்சியில் திரையங்குகள், கோவில்களை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மேற்படி வண்ணத்துப்பூச்சி பூங்கா மிகப்பெரிய பொருட்செலவில் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பூங்காவிற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து செல்ல ஒரு சில அரசு பேருந்துகளை தவிர வேறு போக்குவரத்து சேவை கிடையாது.

மேலும் வெளியூர் பயணிகள் தனியார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தான் கட்டணம் செலுத்தி மேற்படி பூங்காவிற்கு செல்லவேண்டியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தும் சிலர் வெளியூர் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.

எனவே போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்பகோணம் கோட்ட திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் அவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரை செல்லும் அரசு பேருந்துகளை வண்ணாத்துப்பூச்சி பூங்கா வரை நீடித்து இயக்க ஆவணம் செய்வதோடு,

மினி பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதியளித்து சுற்றுலாவை மேம்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர்
வக்கீல்.S.R.கிஷோர்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.