டாக்டர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து அமைதிப் பேரணியாக அறிவாலயம் சென்றடைந்து .
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
இந்நிகழ்வில் கே.என்.சேகரன் வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், மதிவாணன், கொட்டப்பட்டு தர்மராஜ், நீலமேகம், மோகன், ராஜ்முஹம்மது, மணிவேல் குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .