திருச்சியில் குற்றங்களை தடுக்க
மன்னார்புரம் சர்விஸ் ரோடு பகுதியில்
3 கண்காணிப்பு கேமராகள் பொருத்தம்.
போலீசார் நடவடிக்கை.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் ( தெற்கு) ஸ்ரீதேவி அறிவுரையின்படி திருச்சி
மன்னார்புரம் சர்வீஸ் ரோடு பகுதியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும்,
சந்தேக நபர்களை கண்காணிக்கவும், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் நபர்கள் மற்றும் வாகன பதிவு எண் இல்லாமலும், மூன்று நபர்களுடன் செல்லும் நபர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க
3 உயர் ரக கண்காணிப்பு கேமராக்கள் சி.சி.டி.வி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த அதிநவீன கேமராக்கள் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுடன் 24 நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருக்ககூடிய வசதி செய்யபட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் எடமலைப்பட்டி புதூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.