Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவை ஒன்றிணைத்து தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்குவார் சசிகலா. ஒத்தக்கடை செந்தில் பேட்டி.

0

திருச்சியில் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில்

இன்று காலை 10 மணி அளவில் ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள வழிவிடுவேல் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம். பூஜை செய்யப்பட்டது.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்
அருகில் உள்ள அம்மா உணவகத்தில் உணவும் வழங்கப்பட்டது.

முடிவில் ஒத்தக்கடை செந்தில் கூறுகையில்:-

அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் தியாகத் தாய் சின்னம்மாவின் பிறந்தநாள் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

எப்பொழுதுமே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோதே சின்னம்மாவின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வந்துள்ளேன்.

இன்றும் அதே போல் சின்னம்மா பூரண நலத்துடன் நீண்ட ஆயுள் பெற்று வாழ திருச்சி ஜங்ஷன் வழி விடுவேன் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினோம்.

விரைவில் அதிமுகவை ஒன்றிணைத்து தமிழகத்தில் பெரும் மாற்றத்தை தியாகத்தாய் சின்னம்மா அவர்கள் கொண்டு வருவார்கள் என நம்புகிறோம் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.