திருச்சியில் வாலிபர்களை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியை சேர்ந்த பாலச்சந்திர குமார் (18) இவர் கடந்த 29ஆம் தேதி இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே உள்ள 5வது விளக்கு கம்பம் அருகே தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் உடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர்கள் இருவரையும் தாக்கி விட்டு ஸ்ரீகாந்த் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிசென்றனர்.
இதனை தொடர்ந்த பலத்த காயமடைந்த ஸ்ரீகாந்த் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பாலச்சந்திர குமார் கே கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மூன்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.