Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் 7ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து.மாநகராட்சி ஆணையர் தகவல்

0

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு 3 நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாய் குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் கோணக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச்செல்கிறது . குழாயின் ஏற்ப்பட்ட பழுதினை சரி செய்திடும் பொருட்டு மாநகராட்சியால் 06.08.2022 அன்று பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால்  கீழ்க்கண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் புத்தூர் பழைய மற்றும் புதிய , உறையூர் பழைய மற்றும் புதிய , பாரதிநகர் , மங்கள நகர் , பாத்திமா நகர் , சிவா நகர் , செல்வா நகர் மற்றும் ஆனந்தம் நகர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு நாளை  07.08.2022 ஒரு தினங்களுக்கு குடிநீர் வீநியோகம் இருக்காது .

08.08.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார் .

Leave A Reply

Your email address will not be published.