திருச்சி வ.உ சி சிலை சுற்றுச்சுவர், நுழைவாயில் சீர் செய்யக்கோரி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாடே கொண்டாடும் நிலையில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் அருகில் உள்ள சுதந்திர பேராட்ட வீரர் செக்கிலுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிலை உள்ள பகுதியின் சுற்று சுவர்களில் நினைவு நாள் சுவரொட்டி, விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.
மேலும் நுழைவு வாயில் செல்லும் பாதை சரிசெய்ய வேண்டும். திருச்சியில் உள்ள மற்ற சிலைகளை பராமரிப்பது போல் இந்த சிலையையும் பராமரித்து பூங்காவையும் சரியாக பராமரித்து அழகுபடுத்துமாறு திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என எனது மனுவில் கூறியுள்ளார்.