வேளாண்மையின் சிறப்பையும், விவசாயிகள் மேன்மை குறித்தும், அவர்கள் போற்றப்படக்கூடிய அவசியம் குறித்தும் விமா புரொடக்ஷன் சார்பில் விமலா தேவி தயாரிப்பில் மணிபாரதி எழுதி இயக்கிய வேளாண் என்ற தனிப்பாடல் வெளியீட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓர் ஹோட்டலில் நடைபெற்றது.
திரைப்பட இயக்குநர் மணிபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கவிஞர் வெற்றிநிலவன், தயாரிப்பாளர்கள் கோவை ஆஞ்சநேயா புரடெக்சன் கந்தசாமி, கணேசன், கவிஞர் அகவி, சென்டரியோ குழும இயக்குநர் நகரத்தினம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க திருச்சி செயலாளர் வழக்கறிஞர் ரெங்கநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் வாழ்த்தி பேசினார்.
விழாவில் பாடலாசிரியர் வெற்றிநிலவன் இசையமைப்பாளர் தாஜ்நூர், இணை இயக்குநர் இளமாறன் மற்றும் புண்ணியமூர்த்தி, நாகரத்தினம், சரவணன்,மணிகண்டன், செந்தில் வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் முன்னதாக பாடல் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.