75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி பார்க்ஓவர் குழு நடத்திய புதிய சாதனை முயற்சி.
பயற்சியாளர் இம்ரான் அவர்களின் 6 வயது மாணவி சிறுமி ஆராதனா.ச(சகாய விஜய் ஆனந்தின் மகள்) கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓட்டம்.
15 நாட்களில் பயிற்சி எடுத்து இந்த சாதனையை நிகழ்ச்சியுள்ளர்.
இதுவரை இந்த சாதனை நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இல்லாத புதிய சாதனை.
கனவு நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஆராதனா புதிய சாதனை முயற்சியில் (2.5கிலோ மீட்டர்) திருச்சி மாநகராட்சி முதல் திருச்சி அறிவியல் பூங்கா வரை கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கொண்டே ஓடி தனது இலக்கை அடைந்தார்.
பல விளையாட்டு துறைகளில் சாதனை புரிவதே தனது லட்சமாக வைத்துள்ளார் இவர்.
இதுவரை வில்வித்தை, தற்காப்பு கலையான டேக்வோன்டோ போட்டிகளில் பல பதக்கத்தை வென்றவர் என்று கூறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து 7வயது சிறுமி ஆரண்யா திருச்சி அறிவியல் பூங்காவில் இருந்து 1 கிலோமிட்டர் வரை கண்களை மூடிக்கொண்டு ஓடி தனது இலக்கை அடைந்தார்.
இவர்களின் சாதனையை கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வாழ்ச்சி சென்றனர்.