திருச்சியில் இன்று
2-வது நாளாக
எடப்பாடி ஆதரவு பகுதி நிர்வாகிகள் கூட்டம்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனியாக கட்சி அலுவலகம் திறந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்கள்..
பகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று பாலக்கரை மற்றும் உறையூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அவர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
இன்று மாலை மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வனிதா,பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குப்தா,எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அப்பாக்குட்டி, என்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர வேலுராஜா, வார்டு செயலாளர் வசந்தம் செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி அதிமுக மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் தொடர்ச்சியாக எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகிகளை ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.