திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில்
மகா சுதர்சன ஹோமம், கோ பூஜை,
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இதையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரஹ தோஷ நிவர்த்திக்காகவும் காலை 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும்,
காலை 11 மணிக்கு கோ பூஜையும், பகல் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி அளவில் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் ரா.சுரேஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள், அன்னதான குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்