நிறுத்தி. வைக்கப்பட்ட விற்பனையாளர்களின் அகவிலைபடியை வழங்க ஆணையிட்ட தமிழக அரசுக்கு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் நன்றி
பொது விநியோக திட்டத்தை தனி துறையாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்ட விற்பனையாளர்களின் அகவிலைப்படியை வழங்க ஆணையிட்ட தமிழக முதலமைச்சர், கூட்டுறவுக் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மினி ஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட போராட்ட கூட்டுக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் தியாகராஜன், பீட்டர் சேகர் , தனலட்சமி உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கபூமி வரவேற்றுப் பேசினார்.சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சின்னதுரை, கிருஷ்ணகுமார் காமராஜ், சதீஷ்குமார் ராம்ஜீ,ராணி, பிரகாஷ், முத்து புவனேஸ்வரி,
திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கணேசன், மலையாளம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிறுத்தி வைக்கப்பட்ட விற்பனையாளர்களின் அகவிலைப்படியை வழங்க ஆணையிட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும், கூட்டுறவு, உணவுத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில பதிவாளர் கூட்டுறவு துறை உயர் அலுவலர்கள் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நிர்வாகிகளுக்கு நன்றி, பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
விழாவில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் மற்றும் கூட்டுக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அகவிலைப்படி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது,
பொதுவிநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் கடையில் பயன்படுத்தும் பி.ஓ.எஸ் எந்திரத்தை மேம்படுத்த வேண்டும்.
எடை தராசுசை மாற்றி புதிதாக தர வேண்டும்.
ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் போது நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.