Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது

0

 

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தினம் (நேற்று திங்கட்கிழமை,) கொண்டாடப்பட்டது.

1967 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் அன்றைய முதலமைச்சராய் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டசபையில் மெட்ராஸ் ஸ்டேட் இனி தமிழ்நாடு என அழைக்கப்படும் என்று முன்மொழிந்தார் . அந்த பெருமைக்குரிய நாளே தமிழ்நாடு தினமாக தமிழகம் தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பள்ளியின் மாணவர்கள் தமிழ்நாடு தினத்தைப் பூக்களால் எழுதினர்.தமிழ்நாட்டின் பலவகை சிறப்புகளையும் படங்களாக் காட்சிப்படுத்தியிருந்தனர்.தமிழகத்தின் பல்வேறு சிறப்புகளையும் எடுத்துரைத்தனர்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே”என்ற பாரதியாரின் பாடலுக்கு மாணவிகள் கும்மி கொட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த இனிய விழாவை தலைமையேற்று நடத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் தி.கீதா தனது தலைமை உரையில் தமிழ்நாட்டின் பல்வேறு சிறப்புகள் பற்றியும் தமிழ்நாடு தினத்தை கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார் .

நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் சித்ரா,தேவசுந்தரி , தண்டபாணி, மற்றும் நிர்மலா ,சத்தியா ஆகியோர் செயல்பட்டனர்.

பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழ்நாடு தினத்தை பள்ளி மேலாண்மை குழுவினரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஊர் பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.