திருச்சியில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதம். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் திமுக அரசு கண்டித்து
பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5ந் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் சிவ சுப்பிரமணியம், இல.கண்ணன், கௌதம் நாகராஜ், பாலன், பார்த்திபன், எம்பி முரளீதரன், லீமா சிவகுமார், கௌதம் நாகராஜ், வக்கீல் மாரியப்பன், ஜெயகர்ணா, காளீஸ்வரன், தண்டபாணி,
ஒண்டிமுத்து, ஊடகப் பிரிவு இந்திரன், சிவகுமார், ஸ்ரீராம், செல்லதுரை, ரவிக்குமார், விஜயகுமார்,
மல்லிசெல்வம், மரியம் வின்சென்ட், சந்தோஷ், நாகேந்திரன், பாலமுருகன், கோவிந்தன்,ரேகா, வேளாங்கண்ணி, பாலசுப்பிரமணியன், தர்மராஜ், , சங்கர் கோகுல் முருகன், அழகேசன், சத்திரப்பட்டி பால்ராஜ், ஆர்.பி பாண்டியன், பிரபாகரன், சுவேந்திரன், ராஜராஜன், இளங்கோ,குரு, அருணாச்சலம், ராகவன், சுதாகர், தினகர், ராஜா, சீனிவாசராஜ், தக்காளி முருகன், சங்கர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.