Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒன்றரை வயது குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதம் இணைக்கப்பட்டது. உலக அளவில் சிறந்த அறுவை சிகிச்சை.திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை.

0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். கடந்த 2020 ஆம் ஆண்டு சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை வர்ஷிகாவின் பாதம் துண்டிக்கப்பட்டது. அதை எடுத்து அங்கிருந்து திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 5 மணி நேர சிகிச்சைக்கு பிறகு துண்டான பாகத்தை மருத்துவர்கள் சேர்த்து வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இன்று தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் என்பதால் அந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு சுமார் ஒரு வருடம் முடிந்து தற்போது இயல்பாக நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ஸ்கந்தா, மயக்கவியல் நிபுணர் செந்தில்குமார் நுண்ணறிவை சிகிச்சை நிபுனர் முரளிதரன் மற்றும் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் தலைமை ஏற்று பேசிய காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் செங்குட்டுவன் கலந்து கொண்டு மருத்துவர்களின் செயல்பாடு குறித்து பேசினார்.

உலக அளவில் மிக குறைவான வயது உடைய குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதத்தை இணைத்து அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சாதனையை காவேரி மருத்துவமனை செய்துள்ளது.

இதற்கு முன் உலக நாடுகளில் 3 வயது குழந்தைக்கு 12 வயது குழந்தைக்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.உலக அளவில் இது ஒரு சிறந்த அறுவை சிகிச்சை.

எனவே விபத்து ஏற்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்படும் சமயத்தில் பிளாஸ்டிக் பையில் வைத்து ஐஸ்பெட்டுக்குள் வைத்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள்ளாக மருத்துவமனைக்கு துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை கொண்டு வந்து சேர்த்தால் அதை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.