15வது திமுக. பொதுத் தேர்தலை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் ஒன்றிய கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் அணியின் பொறுப்பாளர்கள் என பதினோரு பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட வேட்பு மனுவானது இன்று காலை முதல் தேர்தல் ஆணையராக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சைதை குணசேகரனால் விநியோகிக்கப்பட்டது.
வழங்கப்பட்ட மனுக்கள் இன்று மாலை பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளான தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர்கள் மதிவாணன், கொட்டப்பட்டு தர்மராஜ், நீலமேகம், மோகன், மணிவேல்,
டி.பி.எஸ்..எஸ்.ராஜ்முகமது, கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.