100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தவறான முறையில் தமிழக அரசு செயல்படுகிறது. பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் கண்டனம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் அமைக்கப்பட்டு உள்ள புதிய அணையை திறப்பதற்காக நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் வருகை தர உள்ளார்.
இந்நிலையில் முக்கொம்பு செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளை 100 நாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட நபர்களை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரவழைத்து சாலையின் இருபுறங்களிலும் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தவறாக தமிழக அரசு அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களையோ,
பொதுபணிதுறை பணியாளர்களையோ பணி அமர்த்தாமல் 100 நாள் வேலைத்திட்ட நபர்களை வைத்து சுத்தம் செய்வதின் நோக்கம் என்ன?
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தவறான முறையில் தமிழக அரசு பயன்படுத்துவதை பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.