Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாணவர்களை தாக்கி பணம் பறித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

0

 

திருச்சியில்
கல்லூரி மாணவர்களை தாக்கி நகை -பணம் பறித்த
ரவுடி உட்பட 4 பேருக்கு போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் திருச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மல்லீஸ்வரர் (வயது 21). இவர் திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் தினமும் கல்லூரி முடிந்ததும் தன்னுடன் படிக்கும் சண்முகவடிவேல் மற்றும் ஆசாத் பாரதி ஆகிய 2 பேரையும் எடமலைப்பட்டி புதூரில் உள்ள அவர்களது தங்கும் அறைக்கு அழைத்து சென்று விடுவார்.

வழக்கம்போல் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் எடமலைப்பட்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது கருமண்டபம் மாந்தோப்பு ரயில்வே தண்டவாளம் பகுதியில் 4 பேர் கும்பல் அவர்களை வழிமறித்தது.
பின்னர் கல்லூரி மாணவர்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் செயின், 3 செல்போன்கள், ரூ.1900 ரொக்கம் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்த மாணவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதுபற்றி போலீஸ் ஏட்டு மகன் மல்லீஸ்வரர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மாணவர்களை தாக்கி வழிப்பறி செய்த கும்பல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லன்குளம் பகுதியைச் சேர்ந்த அபுதாஹீர் என்கிற அப்புச்சி (வயது 34 )மற்றும் அவரது நண்பர்கள் அருண், பாபு, குட்டை முத்து என்பது தெரியவந்தது.

இவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதில் அபுதாஹிர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் பல்வேறு வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.