திருச்சியில்
கல்லூரி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயம் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம். இவரது மனைவி உமாராணி ,இவர்களது மகள் சத்யபிரியா (வயது 20 ).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் உமா ராணி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
கடை ஊழியர் மாயம்.
திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் ஷோபனா (வயது21 ).இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார். கடையை விட்டு வீட்டிற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த குலாம் தஸ்தகீர் என்பவரது (வயது16) மகளை காணவில்லை. இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.