Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கன்னியா அறக்கட்டளை சார்பில் சாதனை நிகழ்ச்சி, வழக்கறிஞர் வெங்கட் துவக்கி வைத்தார்.

0

 

 

திருச்சியில்
நூறு ஜோடிகள் பாடிய காதல் பாட்டுகள்
சாதனை நிகழ்வாக பதிவு.

திருச்சியில் 100 ஜோடிகள் 100 காதல் பாட்டுகளை இடைவிடாமல் பாடும் சாதனை நிகழ்வு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கன்னியா அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை
குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் துவக்கி வைத்தார்.

இதனை இந்தியன் புக் ஷாப்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாக பதிவு செய்தனர்.

நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை கன்னியா அறக்கட்டளை தலைவர் வக்கீல் அகிலாண்டேஸ்வரி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து ஜோடிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இது போன்ற நிகழ்வுகள் மன அழுத்தத்தை குறைத்து மன அமைதி தரும் என மருத்துவ ஆலோசகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.