திருச்சி அரியமங்கலத்தில்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணை கத்தி முனையில் மிரட்டிய கும்பல்.
சந்தேகத்தின் பேரில் தாய் தந்தை மீதே வழக்கு .
திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் .
இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 32). இவர் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அந்த நாட்டிற்கு வேலைக்கு செல்லும்போது தனது தாய்,தந்தையரிடம் 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டு ஆவணங்களையும் கொடுத்த சென்றுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியதும் திருச்சி வந்தார் .பின்னர் தாய் தந்தையரை பார்த்து நகைகள் மற்றும் ஆவணங்களை திருப்பி கேட்டார். அவர்கள் நகை மற்றும் ஆவணங்கள் இல்லை என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து ஐஸ்வர்யாவை மிரட்டிச் சென்றனர். இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார். சந்தேகத்தின்பேரில் தாய் தந்தை மீதும் புகார் அளித்துள்ளார் .
இந்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா தாய் தந்தையர் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெற்றோர் மீதே மகள் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .