திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில்
வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியுடன் கைது.
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் ராஜ்குமார்
(வயது 32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தொழிலதிபரான இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் கத்திமுனையில் இவரை மிரட்டி பணத்தை பறித்து விட்டு சென்றனர்.
இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன்,பாலு ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.