திருச்சி தாரா நல்லூரில்
மனைவியை பிரிந்த வாலிபர் மாயம்.
திருச்சி தெற்கு தாரநல்லூர் சர்வ சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் .
இவரது மகன் நந்தகுமார் (வயது 37 ).திருமணமாகி
7ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில்நந்தகுமர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டு அருகே உள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் கோகிலா காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.