Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வரகனேரி குழுமியானந்த சுவாமிகள் 122 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.

0

திருச்சி வரகனேரி குழுமியானந்த சுவாமிகள் 122-வது குருபூஜை விழா.

திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் குழுமியானந்த சுவாமிகள் கோவில் உள்ளது . குழுமியானந்த சுவாமிகளின் 122-வது மகா குருபூஜை விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நாளை காலை 6 மணி அளவில் காவிரியில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பன்னிரு திருமறை, திருப்புகழ், திருவருட்பா பாராயணம் நடைபெறுகிறது.

11 மணி அளவில் அபிஷேகம்,மகா தீபாராதனை நடைபெறுகிறது .
மதியம் 12 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. அன்னதானத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன் தொடங்கி வைக்கிறார்.
மாலை 7 மணி அளவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை மறுநாள் (ஞாயிறு) காலை 9 மணிக்கு சுந்தரர் தேவாரம் முற்றோதுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.