Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகபணித்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

 

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மற்றும் சன்ரைஸ் ஃபவுன்டேஷன் இணைந்து “சாலை பாதுகாப்பு”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி TNSTC தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டலம் TNSTC-யின் உதவி பொறியாளர் தங்கவேல் தலைமையுரை வழங்கினார்.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டலம் TNSTC – யின் உதவி மேலாளர் ராஜசேகர் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஜோசப் நிக்ஸன் (வடக்கு பிரிவு) ஆகியோர் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சன்ரைஸ் ஃபவுன்டேஷனின் மனநல ஆலோசகர் ஆனந்தன் மற்றும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை கெளரவ விரிவுரையாளர் கார்த்திகேயன், முதுகலை முதலாமாண்டு மாணவி கீதா இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

மாணவ மாணவிகள் திவ்ய ஸ்ரீ, சந்தோஷ், சேதுபதி, தங்கபாண்டி மற்றும் இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.