தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவிகளுக்கு ஒரு நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களான மாணவிகளுக்கு ஒருநாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர்.
எழிலன் ஆலோசனைப்படியும் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களான மாணவிகளுக்கு ஒரு நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி குந்தவை நாச்சியார் கல்லூரியில் இன்று (19-05-2022) வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் பேராசிரியருமான முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர். சிந்தியா செல்வி மற்றும் பேராசிரியர் முனைவர். சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஒருநாள் பேரிடர் மேலாண்மை பயிற்சியை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பேரிடர் மேலாண்மை பயிறுநர் ஜான் பெஞ்சமின் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.
இந்த பயிற்சியில் 130 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் ஆனா மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த நிகழ்வை தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் கிருஷ்ணபிரியா சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.