ஸ்ரீரங்கம்
வங்கியில் தீ விபத்து என தகவலால் பரபரப்பு.
ஸ்ரீரங்கம் கீழவாசல் வெள்ளை கோபுரம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கி உள்ளது.
இந்த வங்கி இன்று காலை திறக்கப்பட்டு ஊழியர்கள் வழக்கம் போல் பணியை தொடங்கினர்.
வாடிக்கையாளர்கள் பல்வேறு பண பரிவர்த்தனைகளுக்கு அங்கு வந்திருந்தனர். இந்நிலையில் திடீரென்று வங்கியின் உள்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.
இதை பார்த்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது..
அதை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் மங்கி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ் வெடித்து புகை வந்தது தெரியவந்தது.
நீண்ட நேர தாமதத்திற்குப் பிறகு அனைத்தும் சரி செய்யப்பட்டு பிற்பகலில் வங்கிப்பணிகள் வழக்கம்போல் தொடங்கியது.
காலை நேரத்தில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
நேற்றைய தினம் இரவில் நட்சத்திர ஓட்டல் தீப்பிடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.