திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமனிதர்கள் 2022 விருது. காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு விருது.
தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாமனிதர்கள் 2022 என்ற விருது வழங்கும் விழா திருச்சியில் நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை வக்கீல் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் பி.வி. வெங்கட், கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு 40-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கி ,தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.
மேலும் விருந்தினர்களாக மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வீர திருப்பதி மற்றும் புதுக்கோட்டை தலைமை ஆசிரியை மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வசந்தா செல்வகுமாரி நன்றி கூறினார்.