திருச்சி அரியமங்கலத்தில்
மாயமான
மாணவி மீட்பு
திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ஜீவரத்தினம் (வயது 17). திருவெறும்பூர் அரசு ஐ.டி.ஐயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரமேஷ் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் மீட்டனர். தொடர்ந்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.