புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ஆலோசனைப் படியும் புதுக்கோட்டை ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (05.05.2022) நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமையேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல், இந்தியன் ரெட் கிராஸ் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ராஜா முகமது, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கிஷோர், ஜேஜே கல்வி நிறுவனங்களின் செயலாளர் முனைவர் கவிதா சுப்பிரமணியன், ஜேஜே கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பரசுராமன், புதுக்கோட்டை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் முனைவர் தயாநிதி மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரியின் 113 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.