Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 சதய விழாவில் பாஜகவினர் திரளாக பங்கேற்க மாவட்ட தலைவர் ராஜசேகரன் அழைப்பு.

0

 

நாளை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதய விழா நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து திருச்சி ஒத்த கடை அருகில் உள்ள அவரது சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாளை திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த தேசிய,மாநில, மாவட்ட, மண்டல் அணி பிரிவு
,மற்றும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.