Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்த 1700 மதுபாட்டில்கள் அழிப்பு.

0

திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.5.14 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிப்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மணிகண்டம் செட்டிஊரணிப்பட்டி பகுதியில்  வெள்ளைச்சாமி என்பவர வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் போலி மதுபானம் தாயாரித்து விற்பனை செய்து வந்தனர்.


இதுகுறித்த தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்த 1,700 மதுபாட்டில்கள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காரைக்காலை சேர்ந்த கார்த்திக், பாலமுருகன், வெற்றிச்செல்வன், சூர்யா, விஜயகுமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், வீட்டின் உரிமையாளர் வெள்ளைச்சாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக், பாஸ்கரன் இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.14 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை, திருச்சி மாவட்டம் இருங்களுர் வனப்பகுதியில் மதுவிலக்குப்பிரிவு டிஎஸ்பி முத்தரசு, ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலையில் போலீசார் அழித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.