Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழக சமுகப்பணித்துறை சார்பில் குடிபோதை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் குடிபோதை விழிப்புணர்வு நிகழ்ச்சி .

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மற்றும் சிகரம் ஃபவுன்டேஷன் இணைந்து “குடி போதை அற்ற வாழ்வு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி எம்ஐஇடி கல்லூரியில் மாணவ மாணவியருக்கு நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிகரம் பவுண்டேஷன் பொறுப்பாளர் சரவணன் மற்றும் தினேஷ் குமார் மனநல ஆலோசகர், சிகரம் பவுண்டேஷன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு எம்.ஐ.இ.டி.கல்லூரியின் துறை தலைவர் சுரேஷ்குமார் தலைமையுரை ஆற்றினார்.

அவரையடுத்து நிகழ்ச்சியின் விருந்தினர் குடி போதை விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை சிகரம் பவுண்டேஷன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆசிரியர் ப்ரியா மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் முதுகலை முதலாமாண்டு மாணவர் நவீன்ராஜ் இணைந்து சிறப்புற நடத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் காவியா, சங்கர், அருள்ராஜ் மற்றும் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.