திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று கனரா வங்கி அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
இதனை ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் இரட்டையர் பிரிவு போட்டியாக நடைபெற்றது.
பின்னா் மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.