திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த 4ம் தேதி நகரசபை தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 26ம் தேதி துணைத் தலைவர் தேர்வு நடைபெற இருந்தது.
அதிமுகவை சேர்த்த 10 உறுப்பினர்கள் மட்டுமே துணைத் தலைவரை தேர்ந்தெடுத்த வருகை தந்து இருந்தனர்.
தி.மு.க. கூட்டணி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் 16 பேர் கலந்துகொள்ளாதால்
போதிய உறுப்பினர்கள் இல்லை என்று கூறி தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.