Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.

0

 

ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் அவர்களின் ஆலோசனைப் படியும் ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (10.03.2022)  நடைபெற்றது.

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமையேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல்,  தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம்,  ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர். பானுமதி,  தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் கலைச்செல்வி மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மாபெரும் இரத்ததான முகாமில்  ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரியின் 130 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்  இரத்ததானம் செய்தனர்.

இந்த நிகழ்வை ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். கலைச்செல்வி ஏற்பாடு செய்து சிறப்புற ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.