Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே ஓடும் காரில் தீ.அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

0

தேசிய நெடுஞ்சாலையில் ஒடும் காரில் தீ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36)
வையம்பட்டியில் இருந்து ஹீன் டாய் வெர்னா காரில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மணப்பாறையை அடுத்த மாணிக்கம் பிள்ளை சத்திரம் அருகே வரும் போது திடிரென காரில் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் காரில் இருந்து மோகன் ராஜ் இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த விபத்தில் காரின் பெரும்பகுதி நாசம் அடைந்தபின் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.