Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிய கோலி,தோனிக்கு நன்றி தெரிவித்து ட்விட்.

0

 

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .டி20,ஒரு நாள் போட்டி,கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது ,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த நான் தகுதியானவன் என, என் மீது நம்பிக்கை வைத்த எம்.எஸ். டோனிக்கு நன்றி.என குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.