நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 குறித்த ஆலோசனைக் கூட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடிய நகர கழகம், பகுதி கழகம், மற்றும் பேரூராட்சிகளை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதில் வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர்கள் எஸ்.பி.பாண்டியன், பவுன் M.ராமமூர்த்தி, பகுதி கழக செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், பேரூராட்சி செயலாளர்கள் முத்துக்குமார், பொன்னி சேகர், ஜெயசீலன், பிச்சைப்பிள்ளை, ஜேக்கப் அருள்ராஜ், திருமலை சாமிநாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.