Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபர் கைது.

0

கோவையில் திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நாடகமாடி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பேஷன் போட்டோகிராபர் கணேஷ் ஆனந்த், கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில்  தங்கி போட்டோ எடுத்து வந்துள்ளார்.

கணேஷ் ஆனந்த் தனது  முகநூல் பக்கத்தில், தான் திரைப்படம் ஒன்று எடுப்பதாகவும், அதில் அழகு, இளமை உள்ள நடிகை தேவை என செல்போன் எண்ணுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதைப் பார்த்த கோவையை சேர்ந்த திருமணமாகாத 25 வயது இளம்பெண் ஒருவர், கணேஷ் ஆனந்தை  தொடர்பு கொண்டு தனக்கு துணை நடிகை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.

அந்த இளம்பெண்ணை நேரில் வரவழைத்த கணேஷ் ஆனந்த், அவரை பல்வேறு பகுதிக்கு அழைத்து சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட கணேஷ் ஆனந்த், தான் ஒரு இளமையான காதல் கதையை படமாக்க உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தபடத்தில் தானே கதாநாயகனாக நடிப்பதாகவும், அதில் கதாநாயகி வேடத்திற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அப்பெண் வீட்டுக்கு வந்தவுடன், அவருக்கு சிறிய ஆடை கொடுத்து அணிய வைத்ததோடு, அந்த ஆடையில் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஆடையை ஒழுங்குபடுத்துவது போல அருகில் சென்ற கணேஷ் ஆனந்த் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது  அந்த பெண் எச்சரித்த நிலையில், கணேஷ் ஆனந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து கோவையில் பதுங்கியிருந்த கணேஷ்  ஆனந்தை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.