Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் தகவல்.

0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9-ல் அரியலூர் ,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை ,தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் .

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.