Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

36-வது நாளான இன்று ருத்ராட்ச கொட்டை அணிந்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் உண்ணாவிரதம்.

0

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும், அதை செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக திருச்சி அண்ணாமலை நகர் மலர்ச்சாலையில்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 46 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

36 வது நாளான இன்று விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் தருகிறேன் என கூறிசொன்ன சொல்லை காப்பாற்றதால் மோடி நேற்று பட்டை அடித்து விட்டு இன்று ருத்ராட்சை தந்துவிட்டார் எனக் கூறி விவசாயிகள் ருத்ராட்ச கொட்டை கழுத்தில் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மாநில துணை தலைவர்கள் மேகராஜன், தட்சிணாமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர்கள் பிரேம்குமார், வரப்பிரகாஷ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.