Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடிகர் பார்த்திபனுடன் விஜய் சேதுபதி.சமூக வலைதளங்களில் வைரலாக படம்.

நடிகர் பார்த்திபனுடன் விஜய் சேதுபதி.சமூக வலைதளங்களில் வைரலாக படம்.

0

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது.

இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறவுள்ளார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

இதைப்போல 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, ‘மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம்’ என்ற படத்துக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்படுகிறது.

அசுரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல ‘போன்ஸ்லே’ என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், ‘மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி’ மற்றும் ‘பங்கா’ ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெறுகிறார்கள்.

இதைப்போல சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெறுகிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

மேலும் கண்ணான கண்ணே… பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், ‘கேடி (எ) கருப்பு துரை’ என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறுகிறார்கள்.

இந்தநிலையில், சிறந்த துணை நடிகருக்கான விருதை பெறும் விஜய் சேதுபதி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தற்காக எனக்கு தேசிய விருது கிடைப்பதற்கு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தான் காரணம் என்றார்.

முன்னதாக விருது வழங்கும் இடத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்த எடுத்துகொண்ட புகைப்படத்தை பார்த்திபன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.