Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை ஆணையருக்கு முனைவர். ஜான் ராஜ்குமார் பாராட்டு.

திருச்சி மாநகரில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை ஆணையருக்கு முனைவர். ஜான் ராஜ்குமார் பாராட்டு.

0

திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அறிவித்த புதிய காவல்துறை ஆணையர் கார்த்திகேயனுக்கு சமூக
ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்
பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரும்,
சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் திருச்சி மாநகர காவல் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில்
கூறியிருப்பதாவது:

கடந்த 25.09.2021 அன்று திருச்சி மாநகர காவல் துறையில் புதிய காவல் ஆணையராக பொறுப்பு ஏற்ற கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

தாங்கள் பதவியேற்றவுடன் ரவுடிகளின் கொட்டம் தொடர்ந்து அடக்கப்படும். குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டம் மற்றும் ஒழுங்கு
பாதுகாக்கப்படும். திருச்சி மாநகர பொதுமக்களின் நண்பனாக காவல்துறை இருக்கும்.

பொதுமக்கள் குறைகளை
தெரிவிக்க எப்போது வேண்டும் என்றாலும் காவல் துறையை அனுகலாம் என்று கூறியுள்ளீர்கள்.
இது வரறேக்கதக்கது.

திருச்சி மாநகர பொது மக்கள் சார்பிலும் அனைத்து சமூக
ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வளர்கள் சார்பிலும் திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு நன்றியையும், பாரட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடையுராக கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் நடைபெற அனுமதிக்க கூடாது.

என ஜான் ராஜ்குமார்ஆணையருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.