Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

46 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று பட்டை நாமம் அணிந்து அய்யாக்கண்ணு போராட்டம்.

46 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று பட்டை நாமம் அணிந்து அய்யாக்கண்ணு போராட்டம்.

0

இன்று 5-வது நாள் விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்

முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம்.

கரூர் பைபாஸ், மலர் சாலையில் இன்று ஐந்தாவது நாளாக லாபகரமான விலை வழங்காமல் சட்டையை பிடிங்கி கொண்டதால் முதல் நாள் சட்டை இல்லாமலும் அரசு வேஷ்டியையும் பிடுங்கி கொண்டதால் இரண்டாவது நாள் விவசாயிகள் கோவணம் கட்டியும் மூன்றாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை அரசு பிச்சை எடுக்க விட்டு விட்டதால் கோவணம் கட்டி கொண்டு பிச்சை எடுத்தும்,

நாண்காவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதால் விவசாயிகள் மண்டை ஒட்டுடனும்,

ஐந்தாவது நாளான இன்று விவசாயிகளை மத்திய லாபகரமான விலை தராமல் ஏமாற்றி விட்டதால் நாமம் போட்டு உண்ணாவிரதம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.