காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கீதா தலைமையில் மகாகவி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
“”மகாகவியைக் கொண்டாடுவோம்”
தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி ”மகாகவி நாள்” காருகுடி அரசு உயர் நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.””கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும்,
“”பெரிதினும் பெரிது கேள்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தலைமை ஆசிரியர் கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி, ஆசிரியர்கள் சுமதி,தியாகராஜன்,
பெருகனூர் தலைமையாசிரியர் செல்வமணி, ஆசிரியை கலைமணி ஊருடையாப்பட்டியின் ஆசிரியர் மணிகண்டன் , வடமலைப்பட்டி ஆசிரியர் கணேசன்,அஞ்சல மேலூர் ஆசிரியர் ராதா,முத்துராஜா பாளையம் ஆசிரியர் திருகுமரன், அலகாப்பட்டி ஆசிரியர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இவ்விழா கொண்டாடப்பட்டது.